நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Saturday 30 April 2016

தாய்மொழிக்கல்வி



தாய்மொழிக்கல்வி


Image result for தமிழ்க்கல்வி 
சமூக மரபுரிமை எனப்படுவது நம்முடைய முன்னோர்கள் உருவாக்கித் தந்துள்ள பண்பாட்டில் காணப்படும் பல்வேறு கூறுகளாகும். இலக்கியம், நுண்கலைகள், தொழில்நுட்பஅறிவு, சமயக் கோட்பாடுகள், பழக்கவழக்கங்கள், வாழ்க்கைக் குறிக்கோள்கள் போன்ற யாவும் சமூக மரபுரிமைப்புக்குள் அடங்குவனவாகும். எனவேதான், ‘தமிழை இகழ்ந்தவனைத் தாயே தடுப்பினும் விடேன்என்று முழங்கினார் பாரதிதாசன்.

வாழ்க்கைக்கும் வகுப்பறைக்குமான இடைவெளி – சில காரணிகள்




வாழ்க்கைக்கும் வகுப்பறைக்குமான இடைவெளி – சில காரணிகள்

Image result for schools
 ஒரு காலத்தில் படித்துப் பட்டம் பெறுவது மிக உயர்வாகக் கருதப்பட்டது. ஆனால் அப்பட்டங்கள் இன்று தேர்வில் வெற்றி பெற்றதற்கான ஒரு அடையாளச் சீட்டாக மட்டுமே உள்ளது. கல்வி ஒரு விபத்தாகவும், பல்கலைக்கழகம் தரும் பட்டம் அதற்கான நிவாரணமாகவும் மாறிப் போய்விட்டது.

ஆசிரியர்கள், அரசு, மாணவர்கள்


ஆசிரியர்கள், அரசு, மாணவர்கள்

Image result for indian students in classroom 
ஒவ்வொரு ஆசிரியரும் மாணவனுக்கு நம்பிக்கை தரும் வேர் போன்றவர். இந்த வேர் மாணவர்களிடத்தில் உள்ள ஆளுமைப் பண்புகளை வளரச் செய்ய வேண்டும். உளவியல் அறிஞர் வாட்சன் என்னிடம் குறிப்பிட்ட குழந்தைகளைத் தாருங்கள். அந்தக் குழந்தைகளை நீங்கள் விரும்பும் வண்ணம் அறிஞராக, மருத்துவராக, குற்றவாளியாக மாற்றிக் காட்டுகிறேன்என்று சவால் விட்டார். எனவே ஆசிரியர் பணி என்பது மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டி, அவர்களைப் பிறருக்குப் பயன்படும் வகையில் நிழல் தரு மரங்களாக, கனிகளாக மாற்றிக் காட்டும் மகத்தான பணியாகும். எனவேதான் ஆசிரியர் பணி அறப்பணி என்றார்கள் . அர்ப்பணிப்பு இதயம் உள்ளவர்களால் மட்டுமே இந்த மகத்தான பணியை மேற்கொள்ள முடியும். தற்போதைய நிலைமையில் ஆசிரியர் பணி சேவைஎன்ற நிலையிலிருந்து முழுக்க முழுக்க மாற்றமடைந்து தொழில் என்ற நிலைமைக்கு வந்து விட்டது.

‘மம்மர் அறுக்கும் மருந்து’


 Image result for graduates clip art

மம்மர் அறுக்கும் மருந்து

 ஒரு மனிதனின் முன்னேற்றத்திற்குக் காரணமாக இருப்பது கல்விதான். அறியாமை என்னும் உயிர்ப்பிணியை நீக்கும் மருந்து கல்விஎன்பதால்தான், கல்வியைமம்மர் அறுக்கும் மருந்துஎன்கிறது ஒரு பழம்பாடல். கல்வி என்பது வெள்ளத்தால் போகாது; வெந்தனலால் வேகாது, வேந்தராலும் கொள்ள முடியாது; கொடுத்தாலும் குறையாது; கள்ளர்களால் திருட முடியாது; காவலுக்கும் மிக எளிதுஎன்கிறது கொன்றை வேந்தன்.


ஆசிரியர்- மாணவர் உறவு




ஆசிரியர்- மாணவர் உறவு


Image result for professor

ஒரு சொல் சிறுசொல் அதுகுரு சொல்
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திரு வார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே

இது திருமந்திரப்பாடல் வழி வெளிப்படலாகும் குரு – சீடர் உறவு நிலை. இது குருகுலத்தில் பயிலும் சீடர்கள் மேற்கொள்ள வேண்டிய வழி முறைகள். குருகுலத்தில் வாழ்க்கைக் கல்வியாகிய சுயஒழுக்கம், பொது ஒழுக்கம், தன்னமின்மை, தனது தேவைகளைத் தானே பூர்த்தி செய்தல், வேற்றுமையின்மை, நட்பு பாராட்டல், பிறருக்கு உதவுதல் இவை குருகுல மாணவர்கள் கற்றுக் கொண்ட வாழ்க்கைப்பாடங்கள். குருகுல முறையில் அனைவருக்கும் சமமான கல்வி தராமை, ஓராசிரியர் போன்ற குறைகளும் உள்ளன. அது போல  நிறைகளும் உள்ளன. குரு – சீடன் முறையில் குரு சொன்னதை செய்து முடிப்பவன் சீடன். தற்கால ஆசிரியர் – மாணவர் உறவில் ஆசிரியர் சொன்னதை உடனே மறந்து விடுபவன் மாணவன். இந்து மத்த்தில் குரு தெய்வமாகவே வணங்கப்படக் கூடியவர். கபீர்தாசர் கடவுளும் குருவும் ஓரிடத்தில் தோன்றினால் யாரை வணங்குவது என்பதற்கு குருவைத் தான் முதலில் வணங்க வேண்டும் என்கிறார். கடவுளைக் காட்டியவரே குரு என்பதால் குருதான் மேன்மையானவர். கடவுளை மட்டுமா காட்டுபவர் குரு?

ஆசிரியர் - மாணவர் உறவு

ஆசிரியர் - மாணவர்  உறவு


Image result for professor 
கல்லூரிப் பேராசிரியர் பணி அவ்வளவு எளிதல்ல. அணைக்கட்டிலிருந்து திறந்து விடப்பட்ட காட்டாற்று வெள்ளம் போல் மாணவர்கள் கல்லூரிக்கு வருவர். நம்முடைய திரைப்படங்கள் அவர்கள் மனதில் பதிய வைத்துள்ள கல்லூரி பற்றிய பதிவுகள் நடப்பியலுக்கு அப்பாற்பட்டவை. இளமையில் அனுபவிக்கக் கூடிய உல்லாசமான பருவ வயது குறும்புகளை வெளிப்படுத்தவே கல்லூரி ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பது போன்ற பதிவுகளே மிகுதி. குல்லூரியில் முறையாகக் கற்று கடினமாக உழைத்து, கல்வியினால் முன்னேறிய ஏழை மாணவன் செல்வந்தனமாக மாறுவது போல எந்தப் படத்திலாவது ஒரு காட்சியாவது பதிவாகியிருக்கிறதா என்றால். . . . சொல்லும்படி இல்லை.

பாடத்திட்டம்

மாணவர்கள் திறன் வளர்த்தலில் பாடத்திட்டம் பெரும் பங்காற்றுகிறது.
Image result for பாடத்திட்டம்மெக்காலே கல்விமுறைதான் தற்போதைய குறைபாட்டிற்குக் காரணம் என்று கூறிக்கொண்டிருக்காமல், இந்தியக் குழந்தைகளுக்கேற்ற கல்விமுறையை இந்தியாவின் எதிர்காலத்தைக் கவனத்தில் கொண்டு, புதிய பாடத்திட்டங்களைக் கொண்ட கல்விமுறையை உருவாக்க வேண்டும்.
புரிந்துகொண்டு படிக்கும் கல்வி முறையும், புரிந்து கொண்டு படைப்புகளை உருவாக்கும் கல்விமுறையும் தற்காலத் தேவையாக உள்ளது.
அறநூல்களைப் பயிலுவதும், பாடமாக வைப்பதும், பயன்படுத்துவதும் இன்று குறைந்துவிட்டது. வாழ்க்கையின் நிலைகெடும் ஒவ்வொரு நிலையிலும், தக்க அறிவுரை அளித்துக் காக்கக்கூடியவை அற நூல்கள். இவை பழைய அனுபவங்களின் சாரங்கள். இவற்றை மறக்காமல் பயின்று போற்ற வேண்டும், மாணவர்களுக்குக் குறிப்பாகக் கல்லூரி மாணவர்களுக்கு இவற்றைக் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு நமக்குள்ளது.
மாணவர் கற்கும் பாடங்கள் அறிவு சார்ந்து மாணவனின் சிந்திக்கும் திறனை மேம்படுத்துவதாக அமையவேண்டும். அறிவு நுட்பமுடையவனாக ஒவ்வொரு மாணவரும் உருவாகவேண்டுமெனில் சிறந்த ஆளுமைக்கான பண்புகள், மனவெழுச்சியைக் கட்டுப்படுத்துதல் முதலானவற்றைத் தரக்கூடிய பாடத்திட்டங்கள் வகுக்கப்படவேண்டும். அறநெறிப் பாடங்களே தன்னம்பிக்கை, சுய-மதிப்பு, சுய முன்னேற்றம், ஒழுக்க வளர்ச்சி போன்ற பண்புகளை மாணவர்களிடம் தரக்கூடியவை.

மனஒருமை



Image result for தெளிவு

மனஒருமை


மனதை நமது கட்டுப்பாட்டில் கொண்டுவர திரும்பத் திரும்ப ஒரே செய்தியைக் குறித்து சிந்திக்கவேணடும். அவ்வாறு சிந்திக்கும்போது அச்செய்தியே மந்திரமாகும். நினைத்ததைச் சாதிக்க  இம்மந்திரம் உதவும்.
அடைய வேண்டியதை அழுத்தம் திருத்தமாக நினைக்கா விட்டால், முயற்சி வீணாவதோடு அந்த எண்ணமே மறந்து, மறைந்து போகும் என்கிறார் திருமூலர்.

சகல நன்மைகளுக்கும் மூலமாய் இருப்பது மனஒருமை ஆகும்.
முதலில் மனதை எவன் ஒருமைப்படுத்துகின்றானோ அவனுக்கு சகல செயல்களும் நன்மை தரும்.