நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Tuesday 1 March 2016

கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா. . ...



கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா. . ...



Image result for தலைவன் ஓவியம் 
தாய் மகளின் காதலை அறிந்து கொண்டாள். இதனால் காவல் மிகுந்தது. ஏச்சும் பேச்சும் எழுந்தது. தலைவி, தலைவனைச் சந்திக்க இயலாமல் தவிக்கிறாள். மனம் புழுங்குகிறாள். காதலினால் வருந்துகிறாள். மேனி வாடிப் போனது. தலைவியின் இத்துயரம் கண்ட தோழி தலைவனைச் சந்திக்கின்றாள். தலைவியின் நிலையை எடுத்துக் கூறினாள். அவனுடைய அருளற்ற கொடுந்தன்மையினால் தலைவி படும் துயரத்தை அறிந்த அவன் ஊர் சென்றான். தற்போது உற்றாருடன் உரிய முறையில் பெண் கேட்க வந்துள்ளான். இதை தலைவியிடம் கூறுகிறாள் தோழி.

மயங்குகிறாள் ஒரு மாது தன் மனதுக்கும் செயலுக்கும் உறவு இல்லாது. .



மயங்குகிறாள் ஒரு மாது தன் மனதுக்கும் செயலுக்கும் உறவு இல்லாது. . . .



                தலைவன் திருமணம் பற்றிய எண்ணமின்றி தலைவியைத் தொடர்ந்து சந்தித்து வருகிறான். இவர்களுடைய பழக்கம் ஊராருக்குத் தெரிந்து விட்டது. ஊரெல்லாம் இவர்களைப் பற்றி அலர் பரவி தலைவி வெளியே தலைகாட்ட முடியாத நிலை. எனினும், தன் வருத்தத்தை அவள் தனக்குள் மறைத்துக் கொண்டாள். தாயினால், தலைவனைச் சந்திக்க இயலா நிலையை அடைந்தாள். இதையறியா தலைவன் தலைவிக்காகக் காத்திருந்து காத்திருந்து அவள் வாராமையினால் சோர்ந்திருந்தான்.

Image result for வேங்கை மரம் அருவி 
இருவர் நிலையுமறிந்த தோழி தலைவனை சந்திக்கின்றாள். அங்கு தலைவியின் நிலையே தலைவனிடம் கூறுகிறாள். நான் வரும் வழியில் இரண்டு பெரிய குன்றுகள். எதிர் எதிராக உள்ளன. இரண்டிற்குமிடையே பெரியதொரு பள்ளத்தாக்கு.

கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே… கண்ட போதே சென்றன அங்கே...



Image result for மலைநாடன்கண்கள் எங்கே......... நெஞ்சமும் எங்கே…... கண்ட போதே சென்றன அங்கே.....


         குறிஞ்சிப்பாட்டின் ஏழாவது பாட்டு தோழி தனக்குத்தானே தனியாக பேசிக்கொள்வது போன்ற உத்தி முறையில் அமைக்கப்பட்டுள்ளது. நாடகங்களில் இது போல ஒரு பாத்திரம் தனிமையில் பேசிக்கொள்ளும் காட்சிகள் இருக்கும். ஆனால் ஆயிரம் பேர் இதைக் கேட்பர். தனக்குள் பேசிக் கொள்பவனும் உரக்கவே தன் போக்கில் பேசிக்செல்வான். இங்கு தோழியும் அது போலவே உரக்க பேசிக்கொண்டிருக்கிறாள். ஆனால் அவளுக்குத் தெரியும் கேட்க வேண்டிய தலைவனின் காதில் தன் பேச்சு சென்று விழுமென்று. மறைவில் நிற்கும் தலைவன் தலைவியைச் சந்திக்க வந்திருக்கிறான் என்பதை அறிந்திருக்கும் தோழி அவனுக்கும் நன்கு கேட்குமாறு தனக்குத்தானே பேசிக்கொள்கிறாள். மலர் கொய்வது போலவா, இலை பறிப்பது போலவா, நீருற்றுவது போலவா தோழி ஏதாவது வேலை செய்து கொண்டே பேசுகிறாள்....... இதே தோழியின் தனிப்பேச்சு.