நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Monday 18 August 2014

மகளிர் -குதிரை அணிகலன்கள்



மகளிர் அணியும் - குதிரை அணியும்

 கலித்தொகைப் பாடலொன்று, (மருதன் இளநாகனார்-மருதக்கலி)
 பெண்ணின் அணிகலனோடு குதிரைக்கு அணிவிக்கப்படும் அணிகலன்களை ஒப்பிட்டுக் கூறுகிறது. குதிரை அணிகள் அனைத்தும் பருத்தி நூலால் முறுக்கப்பட்ட கயிற்றினால் ஆனது. ஆனால் பரத்தை அணிந்திருக்கும் அணிகலன்களோ அனைத்தும் தங்கத்தினால் ஆனது.