நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Monday 11 March 2013

மாண்பமை துணைவேந்தர் கி. முத்துச்செழியன் அவர்கள் ஆற்றிய உரை

முனைவர்கி.முத்துச்செழியன்,                துணைவேந்தர்,                                                பெரியார் பல்கலைக்கழகம்,                           சேலம் - 11.

(பண்பாட்டியல், சமூகவியல், வரலாற்றியல் நோக்கில் புறநானூறு என்னும் தலைப்பிலான பத்து நாள் பயிலரங்கின் நிறைவு விழாவில் கலந்துகொண்டு பெரியார் பல்கலைக்கழக மாண்பமை துணைவேந்தர் கி. முத்துச்செழியன் அவர்கள் ஆற்றிய உரை)

தமிழ்மொழி இப்பொழுது உயர்தனிச் செம்மொழியாக இந்திய அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அதனை எண்ணித் தமிழர்களாகிய நாம் பெருமிதம் அடைகின்றோம்; நம்மை நாமே பாராட்டிக் கொள்கின்றோம். ஆனால் அதே நேரத்தில் நமது மொழிக்குச் செம்மொழித் தகுதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ள பழந்தமிழ் இலக்கியங்களான சங்க இலக்கியங்களை நாம் முற்றிலும் அறிந்து கொண்டுள்ளோமா?